
உலகில் எந்த பாகத்திலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி கிரிக்கெட் போட்டியில் மோதுகிறது என்றால், போட்டி நடைபெறும் அந்த மைதானத்தில் பார்வையாளர் தொகையும் அலையாய் மோதிக்கொண்டுதான் இருக்கும். இவ்வாறு மக்கள் தொகை அதிகம் காணப்படும் ஒரு சுற்றுப்போட்டி தான் இந்த ICC CHAMPIONS TROPHY.
இம்முறை(2009) நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த சுற்றுப்போட்டியில் சென்ற சனிக்கிழமை (26-09-09) அன்று , இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி மோதியது. இந்த போட்டி விறுவிறுப்பாக இருந்தது என்பது ஒரு புறம் இருக்க , இந்த போட்டியில் பாகிஸ்தான் விளையாட்டு வீரர்களின் அபிநயங்களை பார்க்கும் போது சற்று கவலைக்கிடமானதாகத்தான் உள்ளது.
ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி வீரர்கள் திறமையக துடுப்பெடுத்தாடி இந்திய அணிக்கு 303 என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி வெற்றி இலக்கை கருத்தில் கொண்டு மிகவும் மெதுவான ஆரம்பத்துடன் தன் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது. துடுபாட்ட ஆரம்பத்தின் போது கெளத்தம் கம்பீர் பாகிஸ்தான் அணியின் ஆரம்ப பந்து வீச்சாளர் மொஹமெட் அமீரின் ஒரு பந்துக்கு முகம் கொடுக்காது தவிர்த்து விடவெ அமீர், கம்பீருக்கு முத்தம் கொடுப்பது போன்று அபிநயம் காட்டினார். மேலும் இந்திய அணித்தலைவர் மஹெந்திரசிங் டோனி , அப்ரைடியின் பந்து வீச்சில் LBW முறையில் ஆட்டமிழக்க, சந்தோஷத்தினால் பூரிப்படைந்த ஒரு பாகிஸ்தான் வீரர் அப்ரைடியை பின்புறமாக கட்டியனைக்க , அப்ரைடி உடன் அவருக்கு முத்தம் இடும் காட்சியானது மிகவும் ஒரு அருவெறுப்பான செயற்பாடு ஆகும்.
இவ்வாறான செயற்பாடுகளை சர்வதேச கிரிக்கெட் சபை ஏற்று கொண்டால் எதிர்கால சந்ததியினரின் நிலைதான் என்ன? !!!!!!!