



ஆழிப்பேரலை வந்து அடங்கி விட்டாலும் , அது வந்து சென்ற தடயங்கள் இன்னுமும் இலங்கையில் அவ்வாறே இருக்கின்றது. அது போன்று ஒரு தடயம் தான் மேற்குறிப்பிடப்பட்ட புகைப்படம். மேற்குறிப்பிடப்பட்ட படமானது சம்மாந்துறையை அண்டிய பகுதியான மருதமுனை கடற்பரப்பு வீதியாகும். இந்த வீதி ஆழிப்பேரலையால் சேதமுற்ற போதும் இப்போது ஓரளவு சீரானது என்று சொல்லலாம். இதற்கான உரிமையை அரசாங்கம் கொண்டுள்ளது என்று நிச்சயம் எவராலும் கூறமுடியாது. ஏன் எனில் அரசாங்கத்திற்கு சீர்திருத்துவதற்கு பணம் வழங்கப்பட்ட போதும்... அவர்கள் ஆழிப்பேரலையால் சீர்குலைந்த வீட்டின் கற்களை கொண்டு இந்த வீதியை சீரமைத்து இருப்பதால். அந்த வீதிக்கு.. அங்கு இருக்கும் அல்லது அங்கு வாழ்ந்த ஒவ்வொருவரும் தான் அந்த உரிமையாளர்கள். இன்று இந்த உரிமையாளர்களின் நிலை குடில் வீடுகளில் வசிப்பதாகும். இவர்களை விசாரித்த போது அரசாங்கம் இவர்களுக்கு வேறு பிரதேசத்தில் வீடுகளை அமைத்து தருவதாக கூறியுள்ளதாக தெரிவிக்கின்ரனர். ஆனால் அங்குள்ளவர்கள் கருத்து தெரிவிக்கையில் தங்களுக்கு தாங்கள் வசித்த் இடங்க்ளிலேயே இருப்பிடங்களை ஏற்படுத்தி தரமறுத்ததாக கூறுகின்றனர். அதனை அரசு பாதுகாப்பின்மை காரணமாக மறுத்துள்ளது. இந்த காரணத்திற்கு மக்கள் சொல்லும் பதிலகள்............
1) துறைமுகத்தை நாட்டின் நடுவெ நகர்த்தினால் பாதுகாப்பாக இருக்கும்.
2) ஆடத்தெரியாதவனுக்கு மேடை சரியில்லையாம்.
3) பணம் இருந்தால் இடமுண்டு.
4) தேர்தல் வருவது தெரிந்து யாராவது வெளினாடு செல்வார்களா?....... வருமானம் தரும் கரையைவிட்டு யாரும் செல்வாரா?
ஆக்கம் :- தர்ஷன்