
சுடசுட வேலையை துவங்க வேண்டியதுதானே என்றால், அங்குதான் பிரச்சனையே?
எங்க தட்டினா எங்கே திறக்கும் என்பது தெரியாதவரா அமீர்? தனது படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமான ஜெயம் ரவி, இடையில் இச் நோக்கி தன் பார்வையை திருப்பியது அமீரை ரொம்பவே அதிர வைத்தது. பிரபுதேவாவிடம் நேரடியாக பேசியும் ஒரு பலனும் கிடைக்காததால் சாதுர்யமாக காய் நகர்த்தினாராம். (இத்தனைக்கும் ரவியின் அப்பா எட்டிட்டர் மோகனின் சப்போர்ட் கண்ணபிரானுக்குதான் என்கிறார்கள்) அதிகார மையத்தின் அசத்தல் பொறுப்பில் இருக்கும் ஒருவரை தயாரிப்பாளர் ஆக்கிவிட்டார் தனது படத்திற்கு. அவர் சொல்லியும் கேட்காமல் இருப்பாரா பிரபுதேவா? "உங்க படத்தை முடிச்சிட்டு வாங்க. காத்திருக்கிறேன்" என்று க்ளியரன்ஸ் கொடுத்துவிட்டாராம். நடுங்க வைக்கும் அந்த தயாரிப்பாளர் யார் என்பது நல்லநேரத்தில் தெரியத்தானே போகிறது?

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையை நேரில் கண்டதாகக் கூறப்படும் சாட்சி ஒருவரை குற்றத் தடுப்புப் பிரிவினர் கல்கிசை நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தினர். சாட்சி தொடர்பில் இரகசியங்களைப் பேணுவதற்கான தேவையுள்ளதாக கல்கிசை நீதிமன்ற நீதவான் ஹர்ஷ ஹேதுங்கவிடம் குற்றத்தடுப்புப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்கான அனுமதியையும் கோரியுள்ளனர்.லசந்த விக்கிரமதுங்க கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி ராஜகிரியவில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். பிரபல ஊடகவியலாளரான லசந்தவின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என ஊடகவியலாளர்கள் அண்மையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியமை குறிப்பிடத்தக்கது. 



