Jan 28, 2010

மாட்டுக்கு மாடு சொன்னால் கேட்காதாம் மணிகட்டின மாடு சொன்னாதான் கேட்குமாம்


பல்டியடித்தார் பிரபுதேவாகண்ணபிரான், இச்... எது முதலில்? இந்த குழப்பத்திற்கு விடை கிடைத்திருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜுடன் வெளிநாட்டுக்கு பறந்து போன பிரபுதேவா நான்கு பாடல்களின் கம்போசிங்கை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பிவிட்டார்.
சுடசுட வேலையை துவங்க வேண்டியதுதானே என்றால், அங்குதான் பிரச்சனையே?
எங்க தட்டினா எங்கே திறக்கும் என்பது தெரியாதவரா அமீர்? தனது படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமான ஜெயம் ரவி, இடையில் இச் நோக்கி தன் பார்வையை திருப்பியது அமீரை ரொம்பவே அதிர வைத்தது. பிரபுதேவாவிடம் நேரடியாக பேசியும் ஒரு பலனும் கிடைக்காததால் சாதுர்யமாக காய் நகர்த்தினாராம். (இத்தனைக்கும் ரவியின் அப்பா எட்டிட்டர் மோகனின் சப்போர்ட் கண்ணபிரானுக்குதான் என்கிறார்கள்) அதிகார மையத்தின் அசத்தல் பொறுப்பில் இருக்கும் ஒருவரை தயாரிப்பாளர் ஆக்கிவிட்டார் தனது படத்திற்கு. அவர் சொல்லியும் கேட்காமல் இருப்பாரா பிரபுதேவா? "உங்க படத்தை முடிச்சிட்டு வாங்க. காத்திருக்கிறேன்" என்று க்ளியரன்ஸ் கொடுத்துவிட்டாராம். நடுங்க வைக்கும் அந்த தயாரிப்பாளர் யார் என்பது நல்லநேரத்தில் தெரியத்தானே போகிறது?

Jan 27, 2010

பழைய குருடி கதவ திறவடி


இலங்கையின் 6வது ஜனாதிபதி தோ்தலில் மகிந்த ராஜபக்ச 18 லட்சம் அதிகப்படியான வாக்குகளினால் மாபெரும் வெற்றி

இலங்கையில் நடைபெற்று முடிந்த ஆறாவது ஜனாதிபதி தோ்தலின் சகல மாவட்டங்களின் முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளநிலையில் தற்போதைய ஜனாதிபதியாகவுள்ள மகிந்த ராஜபக்ச போட்டி வேட்பாளர் சரத் பொன்சேகாவை விட 1,842, 749 அதிகப்படியான வாக்குகளைப் பெற்று பெருவெற்றி பெற்றுள்ளார்.

இத்தோ்தலில் மகிந்த ராஜபக்ச 6,015,934 வாக்குகளை பெற்று;ள்ளார் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சரத் பொன்சேகா 4,173,185 வாக்குகளைப் பெற்றுள்ளார்.


Jan 21, 2010

இலங்கை பொலிஸின் சாதனையா? சாட்சிக்கு இனிமேல் தான் வேதனையா?

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையை நேரில் கண்டதாகக் கூறப்படும் சாட்சி ஒருவரை குற்றத் தடுப்புப் பிரிவினர் கல்கிசை நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தினர். சாட்சி தொடர்பில் இரகசியங்களைப் பேணுவதற்கான தேவையுள்ளதாக கல்கிசை நீதிமன்ற நீதவான் ஹர்ஷ ஹேதுங்கவிடம் குற்றத்தடுப்புப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்கான அனுமதியையும் கோரியுள்ளனர்.லசந்த விக்கிரமதுங்க கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி ராஜகிரியவில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். பிரபல ஊடகவியலாளரான லசந்தவின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என ஊடகவியலாளர்கள் அண்மையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

Jan 18, 2010

சோதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி



கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைட்டி தீவுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சம் பேர்களையும் கடந்துள்ளதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்து இடிபாடுகளில் இறந்த உடல்கள் சிக்கியுள்ளன. மேலும் இடிபாடுகளில் எவ்வள்வு பேர் உயிருடன் சிக்கியுள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை.

சேதமும், உயிர்ழப்பும் கற்பனைக்கு எட்ட முடியாத அளவில் உள்ளதால் ஏழை நாடான ஹைட்டியிற்கு ஐ.நா. ரூ. 500 கோடி நிவாரணம் அளித்துள்ளது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குவியல் குவியலாக பிணங்கள் சாலைகள் எங்கும் குவிக்கப்பட்டுள்ளன.

ரிக்டர் அளவு கோலில் 7.3 என்று பதிவான இந்த நில நடுக்கத்தில் நாடாளுமன்ற கட்டிடம் பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டிடங்கள் தரைமட்டமாயின. பூகம்பத்தில் சிக்கிய இந்தியர்களின் நிலவரம் என்னவென்று தெரியவில்லை.

பல நாடுகளிலிருந்தும் மீட்புப் பணிகளும், உதவிகளும் ஹைட்டி நோக்கி வந்தவண்ணம் இருக்கின்றன.

சண்டை வந்தால் சட்டை கிழியத்தான் செய்யும்


இறுதிப்போரில் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட படையினர் உயிரிழந்துள்ளதாக சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று முன்னாள் சனிக்கிழமை மாத்தளையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய போது இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தற்போது மகிந்த ராஜபக்ச அரசு போர் வெற்றியினை விற்று அரச தலைவர் தேர்தலில் வெல்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

நாட்டில் இனமொழி பேதங்களை ஒழித்து மக்கள் அனைவருக்கம் சம உரிமைகளை பெற்றுக்கொடுத்து மக்களது தனித்தன்மையினை பாதுகாக்க தொடர்ந்தும் உழைப்பதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கை அரசு தமது சொந்த இலாபத்திற்காகவும் ஆட்சியின் பதவிகளை தக்க வைப்பதற்காகவும் தென்பகுதி சிங்கள மக்களையும் வடபகுதி தமிழ் மக்களையும் ஒருவருக்கெருவர் எதிரிகளாக உருவாக்கும் சதிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

வன்னியின் இறுதிக்கட்ட போரில் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாகவும் முப்பத்தியாறாயிரத்திற்கு மேற்பட்ட படைவீரர்கள் அங்கவீனர்கள் ஆக்கப்பட்டுள்ளதாகவும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்

Jan 7, 2010

வேலுப்பிள்ளை காலமானார்.


தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரனின் தந்தையாரான வேலுப்பிள்ளை அவர்கள் காலமானதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இராணுவ காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் நேற்று இரவு காலமானதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாயணக்கார தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தமது 86 வது வயதில் நேற்று காலமானதாக பிரிகேடியர் குறிப்பிட்டுள்ளார்.

இவர் இயற்கையாக உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேசாளார் உறுதி செய்துள்ளார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற இறுதிக் கட்ட மோதல்களின் போது மோதல் வலயத்திலிருந்து இரானுவத்தினரிடம் சரணடைந்த வேளை வேலுப்பிள்ளை மற்றும் அவரது மனைவி ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கபபட்டிருந்தனர்.

இதனையடுத்து மேலதிக விசாரணகளுக்காக இவர்கள் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Jan 6, 2010

தேர்தல் போதையால் திறந்தது பாதை (A9)


இன்று நள்ளிரவு முதல் ஏ9 ஊடாக வீதித் தடை முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஸ யாழ்ப்பாணத்தில் அறிவித்துள்ளார். இதன்படி இன்று நள்ளிரவு முதல் சகல வாகனங்களும் பொதுமக்களும் எவ்வித அனுமதியும் பெறாமல் 24 மணி நேரமும் ஏ9 வீதியூடாக பயணங்களை மேற்கொள்ளலாம் என பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் 10 திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் போது உயர்பாதுகாப்புவலய நீக்குதல்கள் பற்றிய அறிவித்தலையும் வெளியிடுவார் என பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

Jan 2, 2010

தனிமை