Dec 14, 2009

ஆயதங்கள் மீட்பு

யாழ் பெனிசுல பகுதியில் ஆயதங்கள் மீட்கப்பட்ட ஆயதங்களை படத்தில் காணலாம்...........

விபச்சார வழக்கு + அரசியல் குதிப்பு = நடிகை புவனேஸ்வரி


விபச்சார வழக்கில் கைதாகி வெளிவந்துள்ள நடிகை புவனேஸ்வரி சமீபத்தில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தில் இணைந்தார். அவருக்கு மாநில மகளிர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதையொட்டி தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு 11.12.2009 அன்று வந்த நடிகை புவனேஸ்வரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபொழுது பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.


அப்போது அவர் கூறியதாவது:-

"3வருடத்துக்கு முன்பே நான் இந்த கட்சியில் சேர்ந்து இருக்க வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலையால் சேரவில்லை. இப்போது அரசியலில் சேரும் நேரம் வந்ததால் இணைந்து உள்ளேன். மூவேந்தர் முன்னணி கழகம் நான் சார்ந்த சமுதாய கட்சியாகும். டாக்டர் சேதுராமன் எனக்கு இந்த பொறுப்பை வழங்கியதால் கட்சி பணியில் தீவிரமாக செயல்படுவேன். கடந்த கால சம்பவம் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. அது விதியின் விளையாட்டு. போலீசார் எனக்கு பல்வேறு வகைகளில் நெருக்கடி கொடுத்தார்கள். அதை நான் சட்ட ரீதியாக சந்திப்பேன். என் மீது போடப்பட்ட வழக்கை சந்தித்து குற்றமற்றவர் என நிரூபிப்பேன். நான் கைது செய்யப்பட்டபோது வாக்குமூலம் எதுவும் கொடுக்கவில்லை. நான் சொன்னதாக வந்த அனைத்து தகவல்களும் தவறானது. நான் வாக்குமூலம் கொடுக்க வில்லை என்று போலீஸ் கமிஷனரே கூறி இருந்தார். நடிகர் சங்க தலைவர் சரத்குமாரை நேற்று சந்தித்து இது தொடர்பாக விளக்கம் தெரிவித்தேன். எனது விளக்கத்தை அவர் ஏற்றுக்கொண்டார். எந்த நடிகர்-நடிகை பற்றியும் நான் போலீசில் எதுவும் சொல்லவில்லை. எங்கேயோ ஏற்றிவிட்ட புகை எங்கோ எரிந்துவிட்டது. பத்திரிக்கையாளர்கள் எனது நண்பர்கள். பத்திரிக்கையாளர்களை பற்றி நான் எதுவும் தவறாக எங்கும் பேசுவது கிடையாது. யாரோ சிலர் பேசினார்கள் என்றால் அது அவர்களுக்குள் விஷயமாகும். என் மீதான வழக்கு கோர்ட்டில் இருப்பதால் மேற்கொண்டு எதுவும் சொல்ல விரும்பவில்லை. பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று மட்டும் கூறமுடியும். நடிப்பு என் மூச்சு அதை நிறுத்த மாட்டேன். தற்போது அரசியலிலும் எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதால் இங்கும் பிரகாசிப்பேன். பெண்களுக்கு எதிராக அநீதி எங்கு நடந்தாலும் குரல் கொடுப்பேன். எதிர் காலத்தில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்ய வில்லை.கட்சி தலைமை முடிவுப்படி செயல்படுவேன். திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு இப்போது செல்ல முடியவில்லை. விரைவில் சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேச இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது கட்சியின் பொதுச்செயலாளர் இசக்கிமுத்து உடன் இருந்தார்".

பொம்மைக்குள் புதைந்து போன உண்மை

குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொம்மைகளை சுங்க இலாகா அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி துறைமுகத்தில் கடந்த மாத இறுதியில் சீனாவில் இருந்து 2 கன்டெய்னர்களில் பொம்மைகள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால், அவற்றின் விவரங்கள் முறையாக குறிப்பிடப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த சுங்க இலாகா துறை கமிஷனர் ராஜன் தலைமையிலான அதிகாரிகள், அந்த கன்டெய்னர்களில் இருந்த ரூ.25 லட்சம் மதிப்புள்ள சீன பொம்மைகள், விளையாட்டு பொருட்கள், பார்ட்டிகளில் பயன்படுத்தப்படும் ஸ்பிரேக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இவற்றை பரிசோதனை செய்த போது, பொம்மைகள் தரம் குறைந்ததாகவும், உற்பத்தியாளர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடாமல் இருந்ததும் தெரிந்தது. மேலும், பொம்மைகளில் காரீயம் எனும் ரசாயனம் கலந்த பெயின்ட்டுகள் பளிச்சிடும் வகையில் பயன்படுத்தப்பட்டிருப்பதும், இத்தகைய பொம்மைகளை வைத்து குழந்தைகள் விளையாடினால், நுரையீரல் தொடர்பான நோய்கள் உண்டாகும் என்பதும் தெரிய வந்தது.
மேலும், இறக்குமதி செய்த நிறுவனம் அளித்த தரச் சான்றிதழ்களுக்கும், பொருட்களுக்கும் தொடர்பில்லாமல் இருந்தது. இதையடுத்து, சீன தயாரிப்பு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.