Nov 24, 2009

ஊர் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானக வளரும் என்று நினைக்கும் அரசு.

அன்மைக்காலங்களில் இலங்கையில் நடைபெறும் பிரச்சினைகள் அனைவரும் அறிந்ததே.... நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருந்தும் கூட, அதை பொ்றுற்படுத்தாது பிரிதொரு நாட்டின் துயர் துடைக்க இலங்கை அரசு உதவி செய்து உள்ளது . தஜிகிஸ்தான் எனும் நாட்டில் ஏற்பட்ட வெள்ளபெருக்குக்காக 25000 அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
இந்த நன்கொடையை கையளிப்பதற்காக இலங்கை தூதரகத்தால் விமானபடை தளபதி ஜெயலத் வீரக்கொடி அனுப்பி வைக்கபட்டுள்ளர்.(போர்முடிந்த பின்பு பாதுகாப்பு படை அதிகாரிகளின் வேலை இதுதானோ).இவர் அந்நாட்டின் ஜனாதிபதியை சந்தித்து காசோலையை கையளித்துள்ளார்.
அந்நாட்டு ஜனாதிபதி இலங்கை அரசுக்கு நன்றி தெரிவித்ததோடு மட்டும் அல்லாது இலங்கையுடன் மேலும் உறவை ஸ்திரபடுத்தி கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. (நெருப்பில்லாமல் புகையாதே ஏன் இந்த திடீ்ர் பனி மழை?).