Nov 18, 2009

வீடின்றி தவிக்கும் சரத் பொன்சேகா.



சரத் பொன்சேகவை எதிர் வரும் ஞாயிருக்கு முன்பதாக அரசு வழங்கிய வதிவடத்தை அரசிடமே ஒப்படைக்குமாறூ பாதுகாப்பு அமைச்சு கேட்ட்டுக்கொண்டுள்ளது என பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மிகவும் குறுகியகாலத்தில் பாதுகாப்பான இடம் ஒன்றை தேடிப்பெறுவது என்பது மிகவும் கடினம் என்று முன்னாள் பாதுகாப்பு பிரதம அதிகாரி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இதை தான் சொல்வது உண்ட வீட்டிற்கு இரண்டகம் என்று.................................

ஜோன் ஹோம்ஸ் நம்பிக்கை.


வவுனியா நிவாரண முகாம்களிலுள்ள மக்கள் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு முன்னர் முழுமையாக மீள்குடியேற்றப்படுவர் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாக ஐக்கியநாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்று நான்குநாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்த அவர் இன்று வவுனியா நலன்புரி கிராமங்களுக்கு விஜயம் செய்த பின்னர் மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார்.

அரசாங்கத்தினால் துரிதகதியில் மேற்கொள்ளப்படும் மீள்குடியேற்றம் மற்றும் முகாம்களிலுள்ள மக்களுக்கு செய்துகொடுக்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பில் தாம் திருப்தியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

ஒரே தேசம்: 1000 ரூபாய்




ஒரே தேசம் எனும் கொள்கையை எடுத்துக் காட்ட இலங்கை மத்திய வங்கி புதிய பணத்தாளினை அறிமுகம் செய்துள்ளது. ஒரு பக்கத்தில் சனாதிபதியின் படம், இலங்கை வரைபடம் மற்றும் நெற்கதிர் என்பவற்றையும் மறு பக்கம் மாவிலாறு வெற்றியின் களிப்பும் இருக்கும் வண்ணம் இத் தாள் அச்சிடப்பட்டுள்ளது. இத்தாளின் முதல் பிரதியை இலங்கை மத்திய வங்கி ஆளுனர் திரு அஜித் நிவார்ட் சனாதிபதியிடம் கையளித்தார்.

இலங்கை மத்திய வங்கியினால் நேற்றைய தினம் (17.11.09) வெளியிடப்பட்ட புதிய 1000 ரூபாய் தாளினைப் படங்களில் காணலாம்.