May 21, 2010

எனக்கும் பத்மப்ரியாவுக்கும்...


... பத்மப்ரியாவை விட்டுடுங்கய்யா. நானும்அவங்களும் கல்யாணம் பண்ணிக்கிறோம்னு முக்கிய தலைகள் சில பேருக்கு கடிதம் வந்திருக்கு கேரளாவிலிருந்து. கோடம்பாக்கத்தில் உலாவரும் இந்த மினி சைஸ் அணுகுண்டை போட்ட அநாமத்து வாலிபன் யாராக இருக்கும் என்று மண்டையை சொறிந்து கொண்டிருக்கிறார்கள் அந்த முக்கிய தலைகள்.

முன்னணி நடிகைகள் பலருக்கும் மேனேஜராக இருக்கும் மனோஜ் என்பவருக்கு ஒரு மொட்டை கடிதம் வந்ததாம். அதில் தனது பெயரை குறிப்பிடாத வாலிபர் ஒருவர், பத்மப்ரியாவுக்கு தொடர்ந்து பட வாய்ப்பு வாங்கி தர்றீங்க. பொக்கிஷம் படத்தின் போதே அவளுக்கு கல்யாணம் வரப்போவுது. வேணாம் இந்த வேலைன்னு கடிதம் அனுப்புனேன். கேட்காம செஞ்சிங்க. அதுக்கு பிறகு இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்துக்கும் வாய்ப்பு வாங்கிக் கொடுத்திங்க. இதனால் எங்க கல்யாணம் தள்ளிப் போயிட்டே இருக்கு. இதோட இந்த வேலைய நிறுத்திக்கணும். இல்லேன்னா நடக்கிறதே வேறன்னு மிரட்டியிருக்காராம் அந்த ஆசாமி.

கேரளா வரைக்கும் போன் போட்டு விசாரிச்சதில கிடைச்ச தகவல் இதுதான். அஜய்குமார்னு ஒரு வாலிபருக்கும் பத்மப்ரியாவுக்கும் பழக்கம் இருப்பதாகவும் அவர்தான் இந்த மிரட்டல் கடிதத்தை அனுப்பியிருக்கார்னும் கிசுகிசுக்கிறாங்க. ஆச்சர்யம் என்னவென்றால் பத்மப்ரியாவிடம் நெருங்கிய தொடர்பில் இருக்கும் சேரன், லாரன்ஸ், மேலும் சில நடிகைகளின் மேனேஜர்களுக்கும் இந்த கடிதத்தின் நகலை அனுப்பியிருக்கிறாராம் இந்த மொட்டை கடுதாசி வாலிபர்.

கடவுளுக்கு மட்டுமே இது வெளிச்சம்


தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் தொடர்பாக காலத்திற்குக் காலம் முரண்பட்ட தகவல்கள் வெளிவந்துகொண்டே இருக்கும். ஆனால் தேசியத்தலைவர் இருக்கிறாரா? இல்லையா? என்பதை தமிழ் மக்கள் தாங்களாகவே விளங்கிக் கொள்ள வேண்டும் என்று த. தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு பா. அரியநேத்திரன் அவர்கள் இது குறித்து தெரிவித்தவை வருமாறு;

தலைவர் கடந்த வருடம் மார்ச் 17ஆம் திகதி கொல்லப்பட்டாரென இலங்கை அரசாங்கம் முதலில் அறிவித்தது. ஆனால் 18ஆம் திகதி தான் அவர் கொல்லப்பட்டாரென ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

ஆனால் யுத்த முனையில் நின்று படையினரை வழிநடத்தியவரான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா 19ஆம் திகதி தான் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று ஒரு வருடத்தின் பின்னர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் வேறு தரப்பினர் கூட வேறு திகதிகளைச் சொல்லக்கூடும்.

எனவே பிரபாகரன் கொல்லப்பட்டிருக்கிறாரா? உயிருடன் உள்ளாரா? என்பதைத் தமிழ் மக்கள் சுயமாகவே புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே


மே‌‌ற்‌கி‌ந்‌திய ‌‌தீ‌வி‌ல் மதுபான ‌விடு‌தி‌யி‌ல் இ‌ந்‌திய ‌வீர‌ர்க‌ள் ரகளை‌யி‌ல் ஈடுப‌ட்டது உ‌ண்மைதா‌ன் எ‌ன்று தெ‌ரியவ‌ந்து‌ள்ளது.

மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீ‌வி‌ல் மதுபான ‌விடு‌தி‌யி‌ல் இ‌ந்‌திய ‌வீர‌ர்க‌ள் யுவரா‌ஜ் ‌சி‌‌ங், ரோஹ‌ி‌த் ச‌ர்மா, ஆ‌சி‌‌ஷ் நெஹ‌்ரா, ஜடேஜா ஆ‌‌கியோ‌ர் ‌ரகளை‌யி‌ல் ஈடுப‌ட்டதாக மீது புகா‌ர் கூ‌ற‌ப்ப‌ட்டது. ‌வீர‌ர்க‌ளி‌ன் இ‌ந்த செயலு‌க்கு இ‌ந்‌திய ‌கி‌ரி‌க்கெ‌ட் வா‌ரிய‌மு‌ம் கடு‌ம் க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்‌திரு‌ந்தது.

இது தொட‌ர்பாக இ‌ன்று நட‌ந்த கூ‌ட்ட‌த்‌தி‌ன்போது, மே‌‌ற்‌கி‌ந்‌திய ‌‌தீ‌வி‌ல் மதுபான ‌விடு‌தி‌யி‌ல் இ‌ந்‌திய ‌வீர‌ர்க‌ள் ரகளை‌யி‌ல் ஈடுப‌ட்டது உ‌ண்மைதா‌ன் எ‌ன்று தெ‌ரியவ‌ந்து‌ள்ளது.

இதை‌த் தொட‌ர்‌ந்து 4 பே‌ர் ‌மீது ‌விரை‌வி‌ல் ஒழு‌ங்கு நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று ‌பி‌.சி.‌சி.ஐ தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌‌க்‌கி‌ன்றன.