வானொலித்துறையில் குயில் என்ற உடன் அனைவரதும் மனகண் முன் வருபவர் திருமதி.இராஜேஸ்வரி ஷண்முகம் அவர்கள். தனது 12 வயது முதல் இன்று வரை வான் அலைகளில் குயிலாய் கூவி வருகின்றாள் அந்த பேசும் குயில்
”தமிழுக்கு அமுதென்று பெயர் – அந்த
தமிழ் இன்ப தமிழ் எங்கள்
உயிருக்கு நேர்……” என்று தமிழின் இனிமையை சொன்னவன் கவிஞன் பாரதி.
அந்த பாரதி பிறந்த எட்டயபுரத்தே உள்ள தென்பொதிகைத் தமிழ் சங்கம் 1995.01.29 அன்று நடத்திய முப்பெரும் விழாவிலே எங்கள் தேசத்து மொழ்வளச்செல்விக்கு “வானொலிக்குயில்” பட்டம் வழங்கி கெளரவித்தது.
எத்தனையோ குயில்கள் கானக்குயில், கவிக்குயில் மற்றும் சின்னக்குயில் என வலம்வர எமது மண்ணுக்கு பெருமை சேர்த்தது எமது வானொலிக்குயில். இந்த வானொலிக்குயில் இனிவரும் காலங்களில் தன் சேவயை உலகம் எங்கும் வியாபிப்பதற்காய் ஆண்டு தோறும் ஒரு குயிலை இனம் காண ஆசைப்பட்டது. அந்த வரிசையில் 2009ம் ஆண்டு இனம் காணப்பட்ட முதற்குயில் சம்மாந்துறை மண்ணிலே இனம் காணப்பட்டது. அந்த வானொலிக்குயிலின் மகுடத்திற்கு அழகு சேர்த்த முதற்குயிலின் பயணம்…………,
பெயர் :- அஹமட் இஸ்மாயில் சுஹைல்.
பிறப்பு :-1986-04-02 (சம்மாந்துறை).
ஆரம்பக்கல்வி :-சம்மாந்துறை முஸ்லீம் மத்திய மஹா வித்தியாலயம்
கொழும்பு- DS.சேநனாயக்க கல்லூரி.
நெருங்கிய நண்பர்கள் :-அப்துல் பாஷித், K.M.M.பெளஸான்,ஷாக்கிரா பானு, மோகன், திவாகர்,ரதினி, தாரணி.
பெற்ற பாக்கியம் :-நல்ல தாய் தந்தையர், குடும்ப அங்கத்தவர்கள்.
பிடித்தவை :-அறிவிப்புத்துறை,கிரிக்கெட் விளையாட்டு.
அதிகம் எதிர்பார்ப்பது :-யாவரும் என்னில் காட்டும் அன்பு.
சாதிக்க துடிப்பது :-தொலைகாட்சி வானொலித்துறையில் பிரபல அறிவிப்பாளராகுதல்.
சாதிக்கத்தடை :-எனக்கு உரிய சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும். இதற்கு சில தடைகள்.
கல்வி நிலை :-Diploma in Radio Broadcasting
B.Sc (applied Science-2nd Year)
விருதின் கையால் விருது பெற்ற A.I.A.சுஹைல் பற்றி அவரின் பெற்றோரிடம் கேட்டபோது…………………
எங்கள் மகன் வானொலித்துறையில் கெளரவ விருது பெற்றமை அளவில்லா மகிழ்ச்சி. இலகுவில் மற்றவர்களை நம்பி எமாறாமல் தனது பிடிவாத குனத்தினை குறைத்து எதிர்காலத்தில் நல்ல அறிவிப்பாளராக வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.
நண்பர்கள் பாஷித்,பெளஸான்,பானு……
எங்கள் தோழன் சாதித்தமை நாங்கள் வெற்றி கொண்டது போல் மகிழ்ச்சி. அவனோடு எங்களுக்கு உறவு கொள்ள கிடைத்தமை எங்களுக்கு பெருமை. இருப்பினும் இவர் இன்னும் இன்னும் முன்னேறவேண்டுமாயின் இவரிடம் உள்ள பிடிவாத குணம் முற்கோபம் என்பனவற்றை அடியோடு இல்லாதொழிக்க வேண்டும் என்பதே எமது பிரார்த்தனை, வேண்டுகோள், ஆசை எல்லாமே………
சுஹைல் என்றால் யார்?
அன்பானவன் என்றும் பணிவு கொண்டவன், யார் மனதிலும் தன்னால் காயம் ஏற்படக்கூடாது என்பதில் அதீத கவனம் கொண்டவன். அறிவிப்புதுறையை தன் உயிர் நாடியாக கொண்டு மூச்சுவிடும் இவன் சாதிக்கத்துடிப்பது… அனேக நேயர்களுக்கு தன்னிடம் உள்ள கலத்திறனை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது தான். ஆகவே, தனக்கு உரிய இடம் கிடைத்தால் இண்ட்ரு எப்படி ஒரு வானொலிக்குயலுக்கு மகுடம் சேர்த்தானோ அதுபோன்று நாளை இவன் சூடப்போகும் மகுடத்திற்கு பல இரத்தினக்கற்களை தேடும் முயற்சியில் வானொலியில் உதிக்க போகின்றான் இந்த சூரியன்……………………..
நேர்க்காணல்,தொகுப்பு
R.தர்ஷன்