Dec 6, 2009

இது கடத்தல் அல்ல ....அழித்தல்......

காலி, கலுவெள்ள பகுதியில் அமைந்துள்ள சிவாலயத்தில் இருந்த பிரதான சிவ விக்கிரகமொன்று இனந்தெரியாத நபர்களினால் கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விக்கிரகம் சுமார் 150 ஆண்டுகள் பழமையானது எனவும், ஒரு கோடி ரூபாவிற்கு மேல் பெறுமதியானது எனவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த ஆலயத்தில் கும்பாபிஷகத்திற்கான புனர்நிர்மாணப் பணிகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.கோயிலில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த நபரைத் தாக்கிவிட்டு குறித்த கொள்ளையர்கள் இந்த விக்கிரகத்தை கொள்ளையிட்டுள்ளனர்.

கொடுமையிலும் கொடுமை ; அன்றய ஆரம்பம் மீண்டும்

யாழ்ப்பாணம் அராலிப் பகுதியில் ஒரு பிள்ளையின் தாயார் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு பின்னர் புதைக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இளம் தாயான இவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய பின்னர், கொலைசெய்து புதைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் யாரால் கொலை செய்யப்பட்டார் எப்போது இச் சம்பவம் நடைபெற்றது என்ற விபரங்களைச் சரிவரப் பெற முடியவில்லை.

கொலை செய்யப்பட்டவர் 36 வயதுடைய செல்வபாமா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் அராலியில் உள்ள சிறுவர் பாதுகாப்பு நிலையத்தில் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் பூத உடலை அவர் குடும்பத்திடம் கையளிக்குமாறு நீதிமன்றம் கூறியுள்ளது.

செல்வபாமாவின் உடலை அவரது மகள் அடையாளம் காட்டியிருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து நீதிமன்றம் இவ் உத்தரவைப் பிறப்பித்ததாகவும் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்