Sep 30, 2009

சுமத்ரா தீவில் ஏற்பட்ட நில நடுக்கம் (7.6 magnitude )


சுமத்ரா தீவில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக பலர் உயிர் இழந்து இருக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் கருத்து தெரிவித்து கொண்டிருக்கும் பொழுது, BNO இணைய செய்தி பிரிவினர் இதுவரை நேரம் வரை (2009/10/01 SLTIME 11.25 a.m) 464 பேர் உயிரிழந்த்து உள்ளதாக ஒரு செய்தியை வெளியிட்டு உள்ளனர்.

இதே வேளையில் BBC 200 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும்,மேலும் பாதுகாப்பு கருதி மின் துண்டிக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.மேலும் கருத்து தெரிவித்த ஜகட்ர இயற்கை அழிவு அமைச்சு தலைவர் “ருச்டம் பகய” 1000 பேர் இறந்திருக்ககூடும் என்றும் கூறியுள்ளார்.


ICC CHAPMPIONS TROPHY 2009 அரையிறுதி போட்டிகளில் அவுஸ்ரேலியா, இங்கிலாந்து , பாகிஸ்தான் , நியூஸ்லாந்து












இது வரை நடை பெற்ற போட்டிகளின் பிரகாரம் அவுஸ்ரேலிய அணி இரு போட்டிகளில் வெற்றி பெற்றும் , இந்தியாவுடனான போட்டி மழை காரணமாக தடைபட்டமையால் அந்த போட்டி புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 5 புள்ளிகளை பெற்று, குழு A பிரிவில் முதலிடத்தை பெற்று கொண்டது அவுஸ்ரேலிய அணி. மேலும் பாகிஸ்தான் அணி இரு போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளை பெற்று, குழு A பிரிவில் இரண்டாவது இடத்தை பிடித்து கொண்டது.

ஆகவே குழு Aயில் அரை இறுதி போட்டிக்கு தெரிவான அணிகள் அவுஸ்ரேலியா மற்றும் பாகிஸ்தான்.

குழு Bயில் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன், ஓட்ட விகித அடிபடையில் நியூஸ்லாந்து முதலிடத்திலும், இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும் உள்ளது. இதன் அடிபடையில் குழு Bயில் அரை இறுதி போட்டிக்கு நியூஸ்லாந்து மற்றும் இங்கிலாந்து அணி தெரிவாகி உள்ளது.

இந்த அரை இறுதி போட்டி நாளையும் (ஒக்டோபர் 2/2009) நாளை மறுதினமும் நடை பெறவுள்ளமை குறிபிடத்தக்கது. நாளைய போட்டியில் அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து அணியும், நாளை மறு நாள் போட்டியில் நியூஸ்லாந்து ற்றும் பாகிஸ்தான் அணியும் மோதவுள்ளன. இந்த இரு போட்டிகளுமே பகல் இரவாட்டம் என்பது குறிபிடத்க்கது.

மேற்குறிபிட்டவை எல்லாம் ஒரு புற்ம் இருக்க கடந்த காலங்களில் சிறப்பாக பிரகாசித்த இலங்கை, இந்தியா ம்ற்றும் தென்னாபிரிக்கா அணிகள் இந்த போட்டிகளில் பிரகாசிக்க தவறிவிட்டார்கள்.

என்ன தான் செய்வது இவர்கள் வாழ்கையிலும் சனி பெயர்ச்சியோ என்னவோ?


Sep 28, 2009

பங்களாதேஷ் விவசாய நிறுவனமொன்றின் ஊடாக புலிகள் விமானங்கள் கொள்வனவு: திவயின தகவல்


பங்களாதேஷ் விவசாய நிறுவனமொன்றின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு விமானங்களைக் கொள்வனவு செய்துள்ளனர் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
செக் குடியரசிடமிருந்து பங்களாதேஷ் விவசாய நிறுவனத்தின் ஊடாக ஸ்லிம் 143 ரக விமானங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் கொள்வனவு செய்துள்ளனர்.

செக் குடியரசைச் சேர்ந்த இரகசிய பொலிஸாரினால் இலங்கை பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கிய அறிக்கையில் இந்தத் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

குறித்த விமானங்களை பங்களாதேஷிலிருந்து இந்தோனேஷியாவிற்கு கப்பல் மூலம் அனுப்பியதாகவும், பின்னர் பாகங்களாக பிரிக்கப்பட்ட விமானங்கள் முல்லைத்தீவு கடல் ஊடாக இலங்கைக்கு புலிகள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொழும்பு நகர் மீது நடத்திய வான் தாக்குதல்களின் போது படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்களின் இயந்திர இலக்கத்தை கொண்டு இந்தத் தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

புலிகள் எரித்திரியாவிடம் ஆயுதக் கொள்வனவுக்கு நோர்வே ஒத்துழைப்பு வழங்கியதாம்: கொழும்பு ஆங்கில பத்திரிகை தகவல்


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு எரித்திரியாவிடம் ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு நோர்வே அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக இலங்கையின் முன்னணி ஆங்கிலப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்து அவற்றை எரித்திரியா புலிகளுக்கு வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எரித்திரிய பிரதிநிதிகளுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சந்திப்புக்களை நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஒழுங்கு செய்திருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடு ஒன்றில் குழப்ப நிலையை ஏற்படுத்த நோர்வே அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து சர்வதேச நாடுகள் விசாரணை நடத்த வேண்டுமென அரசாங்கத் தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமரன் பத்மநாதனிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் எரித்திரியாவுடனான தொடர்பு ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் கடற்படை வளத்தை அதிகரிக்கவும் நோர்வே ஒத்துழைப்பு வழங்கியதாகக் குறிப்பிடப்படுகிறது.

யுத்த நிறுத்தக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நோர்வே அரசாங்கம் பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

Sep 27, 2009

ICC Champion Trophy 2009ல் பாகிஸ்தான் அணியின் பால் ஈர்ப்பு அபிநயங்கள்


உலகில் எந்த பாகத்திலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி கிரிக்கெட் போட்டியில் மோதுகிறது என்றால், போட்டி நடைபெறும் அந்த மைதானத்தில் பார்வையாளர் தொகையும் அலையாய் மோதிக்கொண்டுதான் இருக்கும். இவ்வாறு மக்கள் தொகை அதிகம் காணப்படும் ஒரு சுற்றுப்போட்டி தான் இந்த ICC CHAMPIONS TROPHY.

இம்முறை(2009) நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த சுற்றுப்போட்டியில் சென்ற சனிக்கிழமை (26-09-09) அன்று , இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி மோதியது. இந்த போட்டி விறுவிறுப்பாக இருந்தது என்பது ஒரு புறம் இருக்க , இந்த போட்டியில் பாகிஸ்தான் விளையாட்டு வீரர்களின் அபிநயங்களை பார்க்கும் போது சற்று கவலைக்கிடமானதாகத்தான் உள்ளது.

ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி வீரர்கள் திறமையக துடுப்பெடுத்தாடி இந்திய அணிக்கு 303 என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி வெற்றி இலக்கை கருத்தில் கொண்டு மிகவும் மெதுவான ஆரம்பத்துடன் தன் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது. துடுபாட்ட ஆரம்பத்தின் போது கெளத்தம் கம்பீர் பாகிஸ்தான் அணியின் ஆரம்ப பந்து வீச்சாளர் மொஹமெட் அமீரின் ஒரு பந்துக்கு முகம் கொடுக்காது தவிர்த்து விடவெ அமீர், கம்பீருக்கு முத்தம் கொடுப்பது போன்று அபிநயம் காட்டினார். மேலும் இந்திய அணித்தலைவர் மஹெந்திரசிங் டோனி , அப்ரைடியின் பந்து வீச்சில் LBW முறையில் ஆட்டமிழக்க, சந்தோஷத்தினால் பூரிப்படைந்த ஒரு பாகிஸ்தான் வீரர் அப்ரைடியை பின்புறமாக கட்டியனைக்க , அப்ரைடி உடன் அவருக்கு முத்தம் இடும் காட்சியானது மிகவும் ஒரு அருவெறுப்பான செயற்பாடு ஆகும்.

இவ்வாறான செயற்பாடுகளை சர்வதேச கிரிக்கெட் சபை ஏற்று கொண்டால் எதிர்கால சந்ததியினரின் நிலைதான் என்ன? !!!!!!!

Media One News


உலக மக்களுக்கு எம்மால் முடிந்த வரையிலான இந்த உலகில் நடக்கும் அனைத்து விடயங்களையும் உடனுக்குடன் ஆதாரபூர்வமாக தருவதற்காக இணைந்த வாலிபர் குழாம் நாம். அந்த வகையில் எல்லா நிறுவனங்களும் தங்களை முகவரிப்படுத்தி கொள்வதற்காக தமக்கென ஒரு பெயர் சூட்டி கொள்கின்றது. அது போன்று தான் நாம் எமக்கு சூட்டிகொண்ட பெயர் ”மீடியா வன்”("Media One").

இந்த நண்பர்கள் குழாம் இந்த பெயரை சூடிகொண்டது அழகிற்காக அல்ல. இந்த உலகில் முதன்மையான ஒரு நேர்மையான ஊடகமாக திகழவேண்டும் என்பதற்காகவே. அவ்வாறு ஆரம்ப கட்டத்தில் எம்மை இந்த சூழலோடு பழக்கபடுத்தி கொள்வதற்காக இந்த் குழாம் தங்களை வியாபார விரிவாக்கலுக்கு உதவும் ஒரு அணியாக அறிமுகபடுத்தி கொண்டது. ஆரம்ப கட்டத்தில் இலங்கையில் வெளிவரும் ஒரு சஞ்சிகைகாக இரு தடவை விரிவாக்கல் செயற்பாட்டில் ஈடுபட்டது. இந்த செயற்பாட்டிற்காக பல்வேறுபட்ட இடங்களுக்கு எமது குழாம் பயணித்தது. இந்த செயற்பாட்டில் பண்முகத்தாரோடும் எமது நேர்காணல்கள் இடம் பெற்றது. இதன் மூலம் அந்த பிரதேச மக்களின் பிரச்சனைகள் கண்டறிய பட்டது. அந்த பிரச்சனைகள் தொடர்பான தெளிவான கட்டுரைகளை இனி வரும் காலங்களில் எமது இந்த blog பகுதியில் நீங்கள் காணலாம்.

இந்த பகுதியில் உங்களுடன் கூட நாங்கள் கலந்துரையாட தயாராக உள்ளோம். உண்மயான செய்திகளை பிரசுரிப்பத்ற்காக நீங்களும் எம்முடன் இணைந்து கொள்ளுங்கள் ஆதார பூர்வமாக......

நீங்கள் எம்முடன் இணைந்து கொள்வதற்கான மின்னஞ்சல் முகவரி
moneadverts@gmail.com