
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு பாஸ்போட் எடுக்க வந்த, யாழ்ப்பாணம் கொட்டடியை சேர்ந்த 21 வயதான செல்வக்குமார் என்ற இளைஞர் காணாமல் போயுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 14ம் திகதி ஏ9 வீதியூடாக வவுனியா பயணித்த இவர், வவுனியாவிலிருந்து கொழும்பிற்கு யாழ்தேவி மூலம் பயணம் மேற்கொண்டார் எனவும் மேலும் இவரை அழைத்து போக கொழும்பு புகையிரத நிலையத்தில் காத்திருந்தவர், அவரை பல மணி நேரம் காத்திருந்தும் கண்டுகொள்ள முடியாத சந்தர்ப்பத்தில் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அவர்கள் பொலிஸாரிடம் முறைபாடு செய்துள்ளனர்.
குறித்த நபர் உணவு விடுதியில் வேலை செய்து வந்தவர் எனவும் , வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிப்பதற்காக பாஸ்போட் எடுக்க கொழும்பு பயணித்தார் எனவும் குடும்பத்தினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment