Jan 6, 2010

தேர்தல் போதையால் திறந்தது பாதை (A9)


இன்று நள்ளிரவு முதல் ஏ9 ஊடாக வீதித் தடை முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஸ யாழ்ப்பாணத்தில் அறிவித்துள்ளார். இதன்படி இன்று நள்ளிரவு முதல் சகல வாகனங்களும் பொதுமக்களும் எவ்வித அனுமதியும் பெறாமல் 24 மணி நேரமும் ஏ9 வீதியூடாக பயணங்களை மேற்கொள்ளலாம் என பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் 10 திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் போது உயர்பாதுகாப்புவலய நீக்குதல்கள் பற்றிய அறிவித்தலையும் வெளியிடுவார் என பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

No comments: