Jan 28, 2010

மாட்டுக்கு மாடு சொன்னால் கேட்காதாம் மணிகட்டின மாடு சொன்னாதான் கேட்குமாம்


பல்டியடித்தார் பிரபுதேவாகண்ணபிரான், இச்... எது முதலில்? இந்த குழப்பத்திற்கு விடை கிடைத்திருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜுடன் வெளிநாட்டுக்கு பறந்து போன பிரபுதேவா நான்கு பாடல்களின் கம்போசிங்கை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பிவிட்டார்.
சுடசுட வேலையை துவங்க வேண்டியதுதானே என்றால், அங்குதான் பிரச்சனையே?
எங்க தட்டினா எங்கே திறக்கும் என்பது தெரியாதவரா அமீர்? தனது படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமான ஜெயம் ரவி, இடையில் இச் நோக்கி தன் பார்வையை திருப்பியது அமீரை ரொம்பவே அதிர வைத்தது. பிரபுதேவாவிடம் நேரடியாக பேசியும் ஒரு பலனும் கிடைக்காததால் சாதுர்யமாக காய் நகர்த்தினாராம். (இத்தனைக்கும் ரவியின் அப்பா எட்டிட்டர் மோகனின் சப்போர்ட் கண்ணபிரானுக்குதான் என்கிறார்கள்) அதிகார மையத்தின் அசத்தல் பொறுப்பில் இருக்கும் ஒருவரை தயாரிப்பாளர் ஆக்கிவிட்டார் தனது படத்திற்கு. அவர் சொல்லியும் கேட்காமல் இருப்பாரா பிரபுதேவா? "உங்க படத்தை முடிச்சிட்டு வாங்க. காத்திருக்கிறேன்" என்று க்ளியரன்ஸ் கொடுத்துவிட்டாராம். நடுங்க வைக்கும் அந்த தயாரிப்பாளர் யார் என்பது நல்லநேரத்தில் தெரியத்தானே போகிறது?

No comments: