Nov 15, 2009

நடைபெற்றது தேசிய மாநாடா? தேர்தல் பிரச்சாரமா?


உலகில் எந்தவொரு அதிகாரமிக்கவருக்கும் எமது நாட்டை தாரைவாகக நாம் தயார் இல்லை. மக்களுக்கு என்ன தேவையோ அதை நாம் கொடுப்போம் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று கெத்தாராம விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுத்ந்திரகட்சியின் 19வது தேசிய மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
இவ்மாநாட்டில் அரசியல்,படைவீரருக்கு நன்றி செலுத்தல், பொருளாதாரம், தேசிய ஒற்றுமை, சர்வதேச விவகாரம் போன்ற கோரிக்கைகள் ஏகமனதாக ஏற்று கொள்ளபபட்டது. மேலும் இந்த உரையின் நடுவே தமிழில் உரையாற்றிய போது "நாம் ஒரு தாய் மக்கள் இங்கு சிறுபான்மை என்று எவரும் கிடையாது. இங்கு அபிவிருத்தி நடைபெற்றுக்கொண்டுடிருக்கிறது. நாங்கள் பொய் வாக்குறுதிகள் கொடுப்பதில்லை. சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம். மக்கள் தீர்ப்பே எமது தீர்ப்பு" என்று ஜனாதிபதி தெரிவித்தார். இந்த உரைகளின் போது ஜனாதிபதி எதிர்க்கட்சி மேல் சுமத்திய குற்றமானது. அவர்களுக்கு பொதுவேட்பாளர்களை தேர்ந்தெடுக்கதெரியாது என்பதாகும்.
மேலும் மக்கள் மத்தியில் நடைபெறவேண்டியது ஜனாதிபதி தேர்தலா? பாராளுமன்ற தேர்தலா? என்ற கேள்வியையும் எழுப்பியபோது மக்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு கைகளை உயர்த்தி ஆதரவு வழங்கினர்

No comments: