குறுகிய அரசியல் லாபங்களை ஈட்டும் நோக்கில் நாட்டை காட்டிக் கொடுக்க வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
துணிச்சல் மிக்க இராணுவப் படைவீரர்களினால் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான மீட்புப் பணிகளை அரசியல் லாபங்களை ஈட்டும் நோக்கில் காட்டிக் கொடுக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
படைவீரர்களுக்கு அவமரியாதை ஏற்படும் வகையிலான சதித் திட்டங்களுக்கு தாம் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். உலகப் பொருளாதார நெருக்கடி காலத்திலும் நாட்டு மக்களின் தொழில் வாய்ப்புக்களை பாதுகாக்க இந்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயலாற்றியுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
துணிச்சல் மிக்க இராணுவப் படைவீரர்களினால் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான மீட்புப் பணிகளை அரசியல் லாபங்களை ஈட்டும் நோக்கில் காட்டிக் கொடுக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
படைவீரர்களுக்கு அவமரியாதை ஏற்படும் வகையிலான சதித் திட்டங்களுக்கு தாம் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். உலகப் பொருளாதார நெருக்கடி காலத்திலும் நாட்டு மக்களின் தொழில் வாய்ப்புக்களை பாதுகாக்க இந்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயலாற்றியுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1 comment:
ம்ம்ம்... ஊடகத்துறையில் உங்கள் பங்களிப்பு வரவேற்கத்தக்கது... வாழ்த்துக்கள்....
Post a Comment