Dec 7, 2009

கத்தி முனையில் கொள்ளை. தெஹிவளையில் சம்பவம்.

தெஹிவளை பகுதியில் இளம் குடும்பப்பெண்ணின் தாலி கத்தி முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. இன்று(07.12.2009) மாலை 7.30 மணியளவில் இந்த வன்முறை இடம்பெற்றுள்ளது.
தனது தோழியை வழியனுப்ப வந்த யுவதிடமே இவ்வழிப்பறி இடம்பெற்றுள்ளது. சுமார் 440,000 ரூபா பெறுமதியுடைய தாலிக் கொடியே இவ்வாறு கொள்ளையிட்டுள்ளது.
வழிப்பறியை நிகழ்த்திய இரு ஆண்களில் ஒருவர் கத்திமுனையில் யுவதியை மிரட்டியபோது மற்றைய நபர் அப்பெண்ணை தார்ப்பாதையில் சுமார் 5 மீட்டர் தூரம் வரை இழுத்துச்சென்று தாலியை பறித்துள்ளார்.
இந்த சம்பவம் நடைபெற்ற பாதை நெரிசல் மிக்கதாக இருந்த போதும் எவரும் உதவ முன்வரவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது. திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதென்ற பழமொழியை முதலில் ஒழிக்க வேண்டும். ஆனால் இன்னும் வேடிக்கை பார்ப்பதை மட்டும் மாற்றிக்கொள்ளவில்லை இந்த மக்கள்.



மீடியா வன் நிருபர் : துஷி

No comments: